போலீஸுக்கே டிமிக்கி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்..மீரா மிதுனை வலைவீசி தேடிவரும் காவல்துறை

First Published Aug 29, 2022, 9:33 PM IST

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருக்கிறார் என்றும் அவரை விரைவில் படிப்பதாகவும் தெரிவித்தனர்.

MEERA MITHUN

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். மாடலான இவர் அந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார். அதோடு இவர் மீது அழகி போட்டி நடத்துவதாக கூறி பணமோசடிகள் ஈடுபட்டது குறித்த புகார்களும் எழுந்திருந்தது.  பிக் பாஸில் பல கலவரங்களை கிளப்பி இருந்த மீரா வெளிவந்த பின்னர் விவாகரமான வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு நெட்டிசன்களிடம் ஏகபோக திட்டுகளை வாங்கி வந்தார்.

MEERA MITHUN

இதற்கிடையே பட்டியல் இனத்தவர் குறித்து இவர் பேசிய கருத்து மிகப்பெரிய பூகம்பமாக வெடித்து விட்டது. இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மீரா மிதுனை பிடிக்க பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...  Varalaxmi Sarathkumar : யானைக்கு உணவூட்டும் வரலட்சுமி...வைரலாகும் க்யூட் வீடியோ
 

MEERA MITHUN

முன்னதாக திரைப்படத் துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து தனது இன்ஸ்டால் வீடியோவில் பேசியிருந்த மீரா, அவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இது குறித்து சென்னை மத்திய குற்றவியல் பிறவு காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. 

மேலும் செய்திகளுக்கு...8 ஆண்டிற்கு பிறகு மீண்டும் மோதும் அஜித் - விஜய் திரைப்படங்கள்..முந்தைய படங்கள் எவை தெரியுமா?

MEERA MITHUN

இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனின் நெருங்கிய நண்பரான சாம் அபிஷேக் கைது செய்யப்பட்டார். பின்னர் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் தன்னை கைது செய்ய முயல்வது குறித்து கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டார்.  

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினம் மீராமீதுன் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதையடுத்து சாட்சி விசாரணை அன்று குற்றச்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு ஆஜராகாததால் மீரா  மிதுன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை இன்று (ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு...என்னது ..ஏகே 61 தீபாவளிக்கு இல்லையா? வெளியான புதிய ரிலீஸ் அப்டேட்

MEERA MITHUN

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருக்கிறார் என்றும் அவரை விரைவில் படிப்பதாகவும் தெரிவித்தனர். நடிகை தலைமறைவாக உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!