மீனாவுக்கும் நைனிகாவின் பரிதாப நிலை தான்"...உருக்கமாக பேசிய பார்த்திபன்..

Published : Jul 03, 2022, 01:22 PM IST

அன்புக்குரியவர்கள் அவசர பிரிவில் இருக்கையில் எல்லா பிரார்த்தனையும் செய்யவோம். அதுவே முடிவுக்கு வருகையில் கண்ணீர் உறைந்து விடும் என பார்த்திபன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

PREV
15
மீனாவுக்கும் நைனிகாவின் பரிதாப நிலை தான்"...உருக்கமாக பேசிய பார்த்திபன்..
meena

மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த வாரம் நுரையீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். 48வயதான மீனாவின் கணவர் கடந்த ஜனவரியில் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பதிவு செய்திருந்த மீனா மொத்த குடும்பமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், தனது கணவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

25
meena

6 மாத காலமாக ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர் கடந்த செவ்வாய் கிழமை உயிரிழந்தார். இரண்டு நுரையீரல்களுக்கு செயலிழந்த நிலையில் மாற்று உறுப்பிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட வரிசை காரணமாக நுரையீரல் தானம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நுரையீரல் முழுதும் செயலிழந்த காரணத்தால் வித்யாசாகர் உயிரிழந்ததாக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் அறிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...சமந்தா பாணியில் கவர்ச்சி ததும்ப ஐட்டம் டான்ஸ் ஆடிய அஞ்சலி... வைரலாகும் கிளாமர் போட்டோ

 

35
meena

பின்னர் மீனாவின் கணவர் இறப்பு குறித்து பிரபலங்கள் மற்றும் பிரமுகர்கள் ஆறுதலும், இறங்களும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து வித்யாசாகரின் உடலுக்கு சூப்பர்ஸ்டார் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்திநர். அப்போது நைனிகா ரஜினியை கட்டிக்கொண்டு கதறிய காட்சி  நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...BIGG BOSS: பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் போட்டியாளர் குக் வித் கோமாளி ரக்‌ஷனா..? அட...ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.?

45
meena

இறுதி சடங்கின் போது மகன் இல்லாத காரணத்தால் 10 வயது குழந்தை இடுப்பில் துண்டாட தந்தைக்கு காரியம் செய்ததும், அப்பா எழுந்திரு என கதறியதும் கண்களை குலமாக்கியது. இதற்கிடையே மீனா இறுதிச்சடங்கின் போது சிரித்து கொண்டிருந்தார். கணவரை ஒதுக்கி வைத்திருந்தார் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பறந்தன. இதனால் மனம் நொந்த மீனா தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள். என காதல் கணவரை இழந்து நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...நயன்தாராவை இறுக்கி அணச்சு போஸ் கொடுத்த விக்கி... போட்டோ பார்த்து புலம்பித் தள்ளும் நெட்டிசன்கள்

55
parthiban

இந்நிலையில் பார்த்திபன் தனது இரவின் நிழல் புரொமோஷன் விழாவில் பேசியபோது, மீனா குழந்தை போன்றவர். அவருக்கு ஒரு குழந்தை என்பதையே நம்ப முடியாத சூழலில் தன கணவரை இழந்து பரிதவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்க கூடியதாக உள்ளது. கிட்டத்தட்ட 6 மாதங்கள் அவரது கணவர் ஐசியூவில் இருந்ததது மீனாவிற்கு எவ்வளவு சோகத்தை ஏற்படுத்தி இருக்கும். அன்புக்குரியவர்கள் அவசர பிரிவில் இருக்கையில் எல்லா பிரார்த்தனையும் செய்யவோம். அதுவே முடிவுக்கு வருகையில் கண்ணீர் உறைந்து விடும் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

click me!

Recommended Stories