நயன்தாராவின் திருமணம் சர்ச்சையில் சிக்காமல் நடைபெற்றாலும், அது முடிந்த உடனே அவர் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அதாவது திருமணம் முடிந்த உடன் நயன் - விக்கி ஜோடி திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது கோவில் வளாகத்தில் நடிகை நயன்தாரா, காலணி அணிந்து வலம் வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் இதுகுறித்து வருத்தம் தெரிவித்த விக்னேஷ் சிவன், இது தெரியாமல் நடந்துவிட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.