தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என பெயரெடுத்த கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக் கடந்த சில வருடங்களாக நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவரின் காதலுக்கும், தற்போது பெற்றோர் பச்சைக்கொடி காட்டி உள்ளனர். எனவே இவர்களுடைய திருமணம், இந்த மாதம் (நவம்பர் 28ஆம் தேதி) நடைபெற உள்ளது.
எனவே நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவரும் தங்களுக்கு நெருங்கிய வட்டாரத்தில் திருமண பத்திரிகையை கொடுத்து வருகிறார்கள். அதே போல் அவர்களுடைய குடும்பத்தினரும் நெருக்கமானவர்களுக்கு அழைப்புதல்கள் வைத்து வருகின்றனர். இந்நிலையில் மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்தியின் திருமண பத்திரிக்கையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.