ஒரு பாடலின் ட்யூனும் லிரிக்ஸும் தனக்கு பிடித்திருந்தால் அப்பாடலை பாடுவாராம் வித்யாசாகர். அந்த வகையில் சிம்புதேவன் இயக்கிய அறை எண் 305ல் கடவுள் என்கிற திரைப்படத்தில் ‘காதல் செய்’ என்கிற பாடலை பாடி இருப்பார் வித்யாசாகர். இந்த பாடலின் சிச்சுவேஷனே பேண்டஸி நிறைந்ததாக இருக்கும். அதன்படி கடவுள் ஒரு மேன்சனில் தங்கி இருப்பார்.
அப்போது அங்குள்ள தாத்தா ஒருவர் டூர் போக வேண்டும் என ஆசைப்படுவார். அவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அனைவரையும் அழைத்துக் கொண்டு டூர் கிளம்புவார் கடவுள். அப்போது பஸ் ஓட்டிக்கொண்டே கடவுளாக நடித்த பிரகாஷ் ராஜ் பாடும் காதல் செய் பாடலை தான் வித்யாசாகர் பாடி இருப்பார். இந்த பாடலுக்கு நா முத்துக்குமார் பாடல் வரிகளை எழுதி இருந்தார்.
இதையும் படியுங்கள்... விக்ரம் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து பாடிய பாடல் எது? அட சூப்பர்ஹிட் பாட்டு தானா?