போண்டா மணியின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் : சுகாதாரத்துறை அமைச்சர்

First Published Sep 22, 2022, 3:02 PM IST

அவருக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைகள் அனைத்தையும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ponda mani

தென்னிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களாக இருந்த பலரும் நிதி பற்றாக்குறையால் மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் உயிரிழப்பது தொடர்கதை ஆகி வருகிறது. முன்னதாக நகைச்சுவை நடிகர் துளசி, நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கரன் உள்ளிட்டோரின் மரணம் பேராதிச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவர்களது உடல்நிலை குறித்து சோசியல் மீடியாவில் செய்தி பரவியதற்கு பிறகு தான் பலரின் உதவிகளும் கிடைத்தது. அந்த வகையில் தற்போது போண்டாமணி நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு....பாண்டிய மன்னனின் மரணத்திற்கு பழிதீர்க்க வந்த வீரர்கள்..பொன்னியின் செல்வன் வெளியிட்ட புதிய வீடியோ..

போண்டாமணி தற்போது மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அதோடு பிரபல நடிகர் பெஞ்சமின் போண்டா மணிக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

ponda mani

இந்த நிலையில்  ஓமந்தாரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டாமணியை  நேரில் சந்தித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவரின் உடல்நலம் குறித்து விசாரித்ததோடு மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்த தகவலையும் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு... தனுஷ் உட்பட படக்குழுவினர் இணைந்து வெளியிட்ட கேப்டன் மில்லர் சூப்பர் அப்டேட்

ponda mani

பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருவதாகவும், நாளை முதல் டையாலிசிஸ் சிகிச்சை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு அவரது உறவினர்கள் மூலமாகவோ அல்லது உறுப்பு தான ஆணையத்தின் மூலமாகவோ சிறுநீரகம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைகள் அனைத்தையும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

click me!