தென்னிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களாக இருந்த பலரும் நிதி பற்றாக்குறையால் மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் உயிரிழப்பது தொடர்கதை ஆகி வருகிறது. முன்னதாக நகைச்சுவை நடிகர் துளசி, நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கரன் உள்ளிட்டோரின் மரணம் பேராதிச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவர்களது உடல்நிலை குறித்து சோசியல் மீடியாவில் செய்தி பரவியதற்கு பிறகு தான் பலரின் உதவிகளும் கிடைத்தது. அந்த வகையில் தற்போது போண்டாமணி நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு....பாண்டிய மன்னனின் மரணத்திற்கு பழிதீர்க்க வந்த வீரர்கள்..பொன்னியின் செல்வன் வெளியிட்ட புதிய வீடியோ..
போண்டாமணி தற்போது மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அதோடு பிரபல நடிகர் பெஞ்சமின் போண்டா மணிக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.