விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மீராமிதுன். மூன்றாவது சீசனில் பங்கு பெற்ற இவர் பல சர்ச்சைகளை கிளப்பி விட்டிருந்தார். இயக்குனர் சேரன் மீது இவர் கொடுத்த புகார்கள் ரசிகர்களையே வெறுப்படையச் செய்தது. தன்னைத்தானே சூப்பர் மாடல் என கூறிக்கொண்டு சுற்றிவரும் மீரா மிதுன் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களையும் விட்டு வைக்காமல் அவர்கள் குறித்து அவதூறு பரப்பி வந்தார்.
இதற்கிடையே தனது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் என பலவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அவ்வப்போது நெட்டிஷன்களை கடுப்பேற்றி வந்தார். இதனால் பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது அவரது நண்பர் ஷாம் மட்டுமே முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்க வந்தது. அப்போதும் மீரா மிதுன ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மீராவின் மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை என்றும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டது. உறவினர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தனர். இதையடுத்து நவம்பர் மாதம் 14ஆம் தேதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீரா மிதுனின் தாயார் சியாமளா தனது மகளை கடந்த சில நாட்களாக காணவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்...முதல் நாளே மாஸ் வசூல் தான்