மணிரத்னம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட படைப்பு தான் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய நாவலை தழுவி இப்படத்தை இயக்கி இருந்தார் மணிரத்னம். இப்படத்தை லைகா நிறுவனம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது. பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, சோபிதா, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.