ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளன. இன்னும் ஒரு வாரம் மட்டுமே லீக் போட்டிகள் எஞ்சி உள்ளன. தற்போதைய நிலவரப்படி குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 3 இடங்களை பிடிக்க சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை, லக்னோ ஆகிய அணிகள் போட்டிபோட்டு வருகின்றன.