"நான் இறந்தால் என்னை பற்றி நீ தான் பாடணும்" கண்ணதாசன் இட்ட கட்டளை - நட்புக்காக எமனையே திட்டிய வாலி!

First Published Oct 17, 2024, 11:17 PM IST

Kannadasan and Vaali : தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த பாடல் ஆசிரியர்களாக மட்டுமல்லாமல் அதிலும் சிறந்த நண்பர்களாக வலம் வந்த இருவர் தான் கண்ணதாசன் மற்றும் வாலி.

Kannadasan and Vaali

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வைரமுத்து, பா விஜய், மதன் கார்த்தி மற்றும் சினேகன் என்று எத்தனையோ மிகச்சிறந்த பாடல் ஆசிரியர்கள் இப்போது தங்களுடைய அபிரிவிதமான திறமையால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்து வருகின்றனர். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களாக வலம்வந்த பாடல் ஆசிரியர்கள் தான் கண்ணதாசன் மற்றும் வாலி. என்ன தான் வாலியை விட கண்ணதாசன் நான்கு வயது மூத்தவர் என்றாலும், இருவரும் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அறிமுகமாகி, படங்களுக்கு பாடல் எழுதுகின்ற அளவில் மட்டும் எதிரெதிரே நின்று போரிட்டது குறிப்பிடத்தக்கது.

சேட்டை செய்த எம்.ஜி.ஆர்; கடுப்பில் MGRக்கு பாட்டே போட முடியாதுனு சொன்ன MSV - ஏன் தெரியுமா?

MGR with vaali

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவருடைய திரை வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகித்த பாடல் ஆசிரியர்களில் கண்ணதாசனும், வாலியும் மிக மிக முக்கியமானவர்கள் என்றால் அது மிகையல்ல. எதிரெதிர் திசையில் நின்று பாடல்கள் எழுதி மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்து வந்தாலும், தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வந்தவர்கள் வாலி மற்றும் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணதாசனின் மயக்கும் வரிகளை எத்தனையோ முறை பல மேடைகளில் வியந்து வியந்து பாராட்டியவர் வாலி.

Latest Videos


Kannadasan

அதேபோல ஒரு திரைப்படத்திற்கு வாலி மற்றும் கண்ணதாசன் ஆகிய இருவருடைய பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது என்றால், முதலில் கண்ணதாசன் அந்த இயக்குனரிடம் கேட்கும் கேள்வி, "எப்பா இயக்குனரே நான் எழுதி கொடுத்த பாடல்களையும், வாலி கொடுத்த பாடல்களையும் கொஞ்சம் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவரும் சிறப்பாக எழுதுபவர், ஆகவே எங்கள் வரிகள் கிளாஷாக வாய்ப்புகள் இருக்கிறது, அப்படி இருந்தால் சொல்லிவிடுங்கள் மாற்றி கொடுத்துவிட்டு செல்கிறேன் என்று பெருந்தன்மையோடு பேசுவாராம். இப்படி பாடல் ஆசிரியர்களாக எதிர திசையில் நின்று போரிட்டாலும் கூட, தனிப்பட்ட வாழ்க்கையில் மிக மிக அன்னியோன்யத்தோடு வாழ்ந்தவர்கள் கண்ணதாசன் மற்றும் வாலி. இந்த சூழலில் கண்ணதாசன், தான் இறக்கும் தருவாயில் சொன்ன ஒரு விஷயத்தை வாலி தன்னுடைய இறப்புக்கு முன்பு பகிர்ந்துள்ளார்.

Vaali

வாலிக்கு பாராட்டு விழா ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதில் இளையராஜா, கமலஹாசன், கிரேசி மோகன் உள்ளிட்ட பலரும் நேரில் கலந்துகொண்டு வாலியை வாழ்த்தினர். அப்போது கண்ணதாசன் குறித்து பேசிய வாலி, "நானும் அவரும் தொழில் ரீதியாக எதிரெதிரே கடை விரித்தவர்கள் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் எங்களுடைய இந்த நட்பு தற்கால பாடல் ஆசிரியர்கள் மத்தியில் இருக்கிறதா என்றால் அது நிச்சயம் சந்தேகம். கண்ணதாசன் ஒரு முறை, நான் இறந்து விட்டால் எனக்கான இறப்பு பாடலை நீ தான் எழுத வேண்டும் வாலி என்று உரிமையோடு என்னிடம் கேட்டுக் கொண்டார்". 

"அவருடைய வாக்கு பலித்தது, அவர் என்னிடம் சொன்ன வெகு சில மாதங்களில் அவர் உயிரிழந்தார். அவருக்காக ஒரு இரங்கல் கவியரங்கம் நடத்தப்பட்டது. அப்போது அந்த கவியரங்கில் பேச மொழிகள் இல்லாமல் தவித்து நின்றேன். அப்போது படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். இவ்வளவு அழகிய கவிதை புத்தகத்தை கிழித்தெறிந்து விட்டான்" என்று எமனை திட்டி சில வரிகள் சொன்னேன்" என்று கூறினார் வாலி.

விஜய் டிவியில் மற்றும் ஜீ தமிழ் ஹிட் சீரியல்கள் எட்டிய புதிய மையில் கல்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

click me!