உடனே எம்.எஸ்.வி-யிடம் சென்ற அசோகன் முதலில் 20 டியூன்களை வாங்கி எம்ஜிஆரிடம் கொடுக்க, இந்த டியூன்கள் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் எம்.எஸ்.பி-யை நல்ல டியூனாக போட சொல்லுங்கள் என்று கூறினாராம். உடனே எம்ஜிஆர் சொன்னதை நேரடியாக எம்.எஸ்.வி-யிடம் வந்து அசோகன் சொல்ல, மீண்டும் அவர் சில டியூன்களை போட்டு அசோகனிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அதை கேட்ட எம்ஜிஆர் இதுவும் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது. மீண்டும் நீங்கள் எம்.எஸ்-யிடம் சென்று வேறு சில டியூன்களை வாங்கி வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
இப்படியே 40-க்கும் மேற்பட்ட டியூன்களை அந்த படத்திற்காக அவர் இசையமைத்தும் அதை எம்ஜிஆர் ஓகே சொல்லாத நிலையில், இனி என்னால் உங்களுடைய திரைப்படத்திற்கு இசையமைக்க முடியாது என்று கடுமையாக கூறியிருக்கிறார் எம்.எஸ் விஸ்வநாதன். இந்த தகவலை அறிந்த எம்ஜிஆர் உடனடியாக அவரை நேரில் சந்தித்து. இங்க பாருங்க எஸ் எம்.எஸ்.வி, அசோகனிடம் படம் நடித்து அடித்து தருவதாக ஒப்புக்கொண்டேன். ஆனால் பாருங்க நான் கால்ஷீட் கொடுக்க எனக்கு ஒரு நாள் கூட இல்லை, நீங்கள் டியூன் கொடுத்து விட்டால் உடனே அவர் என்ன வச்சி படம் எடுக்க ஆரம்பிச்சிடுவாரு. அதனால் தான் அதை நான் தள்ளி போட்டேன். உண்மையிலேயே உங்களுடைய இசை மிக அருமையாக இருக்கிறது. இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று விளையாட்டாக கூறினாராம். இப்படி தன்னுடைய கால்ஷீட் இல்லை என்பதை மறைக்க அடிக்கடி இது போன்ற நாடகங்களை எம்ஜிஆர் செய்வார் என்று கூறப்படுகிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு "நேற்று இன்று நாளை" திரைப்படம் 1974 ஆம் ஆண்டு எம் எஸ் விஸ்வநாதன் இசையில் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆனது.
இவர் தான் காரணமா? தனுஷுடன் மீண்டும் இணைகிறாரா ஐஸ்வர்யா? விரைவில் வருகிறதாம் குட் நியூஸ்!