ஆச்சர்ய படுத்தும் தோற்றத்தில்... திருக்குறுங்குடி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற கீர்த்தி சுரேஷ்! போட்டோஸ்..!

First Published Nov 21, 2022, 4:54 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, கோவில் மற்றும் தன்னுடைய மூதாதேயர் வீட்டிற்கு சென்றபோது எடுத்த புகைபடங்களை பகிர வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் துளியும் மேக்கப் போடாமல், தன்னுடைய மூதாதேயர் வீட்டிற்கும், மிகவும் பழமை வாய்ந்த திருக்குறுங்குடி கோவிலுக்கும் சென்ற போது எடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தான் ஒரே நாளில் பிறந்த, தன்னுடைய தந்தை சுரேஷ் மற்றும் தாய் மேனகா தம்பதிக்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தார். குடும்பத்துடன் மிகவும் கோலாகலமாக நடந்த இவர்களுடைய பிறந்தநாள் புகைப்படங்களை அவர் வெளியிட, ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த வாரம் வெளியேறிய நிவாவின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா? இதுவரை சம்பாதித்துள்ளது எவ்வளவு தெரியுமா?

மேலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ்... தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் நீண்ட நாட்களுக்கு பின் கோவில் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று மகிழ்ந்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் என்றாலே அதிக அளவில் மேக்கப் போட்டுக் கொண்டு தான் பொதுவெளியில் கூட வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ், துளியும் மேக்கப் இல்லாமல், மஞ்சள் நிற சல்வாரில் மிகவும் சாதாரணமாக... தலையில் பூ வைத்துக்கொண்டு, மிகவும் எளிமையான தோற்றத்தில் இருப்பது பார்ப்பவர்களையே ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நான்கே படத்தில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த மாரி செல்வராஜ்..! உதயநிதி துவங்கி வைத்த படப்பிடிப்பு..!

மேலும் இவருடைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர், உங்களிடம் பிடித்தது இந்த எளிமை தான் என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தற்போது கீர்த்தியின் கைவசம் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வரும் மாமன்னன் மற்றும் சிரின் ஆகிய இரண்டு தமிழ் படங்கள் உள்ளது. மாமனிதன் படத்தில் இவருடைய காட்சிகள் எடுத்து முடிக்க பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. சீரின் படத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக 'தசரா' படத்திலும், சிரஞ்சீவின் தங்கையாக 'போலா ஷங்கர்' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சண்டை கோழியாக மாறிய தனலட்சுமி...! மைனாவிடம் துவங்கி இப்போ ஷிவினையும் விட்டு வைக்கல..! ப்ரோமோ!

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள திருக்குறங்குடியில் தன்னுடைய அம்மா வழி பூர்வீக வீடு மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த நம்பி பெருமாள் கோயிலிலை சுற்றி பார்த்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

click me!