முடங்கிய ரஜினி; தன் எழுத்தால் அவருக்கு மெகா ஹிட் வெற்றியை கொடுத்த கண்ணதாசன் - எந்த படத்தில் தெரியுமா?

First Published Oct 27, 2024, 8:41 PM IST

Actor Rajinikanth : தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த 49 ஆண்டுகளாக மிகச் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

kannadasan and rajini

தமிழில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான "அபூர்வ ராகங்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய குருநாதர் பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் தான் ரஜினிகாந்த். 1976ம் ஆண்டு அவருடைய நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியானது. ஆனால் 1977வது ஆண்டு, அதாவது அவர் திரைத்துறைக்கு வந்த இரண்டாவது ஆண்டில் மட்டும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 13 திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் அறிமுகமான ஐந்து ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உச்ச நடிகராக மாறினார்.

மாநாட்டில் குட்டி ஸ்டோரி சொல்லி விஜய் பில்டப் கொடுத்த அந்த பாண்டிய மன்னன் யார்?

Rajinikanth

1979, அதாவது ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலம் அது. ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து திரைப்படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிசியான நடிகராக வலம் வந்த அவருக்கு மன ரீதியாக பிரச்சனைகள் இருப்பதாக பெரும் பரபரப்பு தரும் செய்திகள் வெளியானது. அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது. தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான "தர்மா யுத்தம்", "தாய் இல்லாமல் நான் இல்லை", "நான் வாழவைப்பேன்" மற்றும் சில தெலுங்கு திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இந்த சூழலில் தொடர்ச்சியாக ரஜினிகாந்தை வைத்து திரைப்படங்களை எடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்கி வந்ததாகவும் சில தகவல்கள் அப்பொழுது வெளியானது.

Latest Videos


Super Star

இந்த சுழலில் தான் 1980வது ஆண்டு பிரபல இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒப்பந்தமானார். உண்மையில் பல இயக்குனர்கள் அவரை வைத்து திரைப்படம் எடுக்க தயங்கிய காலகட்டத்தில் அவரை வைத்து அந்த திரைப்படத்தை தைரியமாக தயாரிக்க முன்வந்தது பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி தான். இருப்பினும் தவறுதலாக இந்த திரைப்படத்தில் ரஜினியை போட்டு விட்டோமோ என்கின்ற மனக்கலக்கம் அவருக்கும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் இது ரஜினிக்கு மீண்டும் ஒரு கம் பேக் திரைப்படமாக மாறும் என்று உறுதியளித்து அப்பிடத்திற்கான பாடல்களை எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

Rajini billa

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 1980 ஆம் ஆண்டு வெளியான அந்த படம் தான் பில்லா. இந்த திரைப்படத்தில் கண்ணதாசன், ரஜினிக்காக எழுதிய முதல் பாடலிலேயே "நாட்டுக்குள்ளே எனக்கொரு ஊருண்டு, ஊருக்குள்ளே எனக்கொரு பேரும் உண்டு, என்ன பத்தி ஆயிரம் பேரு என்னென்ன சொன்னாங்க.. இப்ப என்ன செய்வாங்க" என்று அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வண்ணம் வரிகளை அந்த திரைப்படத்தில் எழுதி, ரஜினியினுடைய பிம்பத்தை மீண்டும் தூக்கிப் பிடித்தார் கண்ணதாசன். பில்லா திரைப்படம் வெளியானது, மெகா ஹிட் ஆனது ரஜினி மீண்டும் மெகா ஹிட் நடிகராக தமிழ் திரை உலகில் இந்த 49 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால் அது சற்றும் மிகையல்ல. 

ஒரே பாடல்; 8 திருக்குறளை ஒளித்துவைத்த கண்ணதாசன் - மெகா ஹிட்டான அந்த பாடல் எது தெரியுமா?

click me!