ஒரே பாடல்; 8 திருக்குறளை ஒளித்துவைத்த கண்ணதாசன் - மெகா ஹிட்டான அந்த பாடல் எது தெரியுமா?
Ansgar R |
Published : Oct 27, 2024, 07:48 PM IST
Kannadasan Song : கண்ணதாசன் எழுதிய ஒரு திரை இசை பாடலில், எட்டு திருக்குறள்களை அழகாக இணைத்து அந்த பாடலை மெகா ஹிட் பாடலாக மாற்றியிருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் காணலாம்
தமிழ் திரையுலகை பொருத்தவரை இன்று வைரமுத்து முதல், மகன் கார்க்கி வரை எத்தனையோ பாடல் ஆசிரியர்கள் தங்களுடைய திறமையால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த பாடல் ஆசிரியராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் வலம் வந்தவர் தான் கண்ணதாசன். இவருடைய வரிகளில் உருவான பாடல்கள் காலம் கடந்தும் இன்றும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தை ஆண்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நடிப்பால் மக்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலருடைய திரை வாழ்க்கை மிகப்பெரிய உச்சங்களை தொட காரணமாக இருந்தவர் கண்ணதாசன் என்றால் அது மிகையல்ல.
கண்ணதாசனை விட நான்கு வயது சிறியவர் என்றாலும், தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போட்டி நடத்திய இரு மாபெரும் பாடல் ஆசிரியர்கள் தான் வாலியும், கண்ணதாசனும். இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக சண்டை இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் மிகச் சிறந்த நண்பர்களாக வாழ்ந்தவர்கள் அவர்கள். ஒருமுறை வாலியை பார்த்த கண்ணதாசன், என்னுடைய இறப்புக்குப் பிறகு எனக்காக ஒரு பாடலை நீ கட்டாயம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். அப்படி கண்ணதாசன் சொல்லி வெகு சில மாதங்களில் அவர் காலமான நிலையில், அவருக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற வாலி "படிக்கத் தெரியாத எத்தனையோ பேரில் எமனும் ஒருவன், அழகிய கவிதை புத்தகத்தை கிழித்துப் போட்டு விட்டான்" என்று மனம் நொந்து பேசினாராம்.
34
Kannadasan Songs
கண்ணதாசன் இறந்தே கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கடந்து விட்டது என்றாலும் கூட, இந்த காலகட்டத்திலும் அவருடைய எத்தனையோ பாடல்கள் பெரிய அளவில் புகழ் பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலில் எட்டு திருக்குறள்களை அம்சமாக இணைத்து பயன்படுத்தி அதை அப்போதே மெகா ஹிட் திரைப்படமாக மாற்றி இருக்கிறார். உண்மையில் இன்றளவும் பக்தி மார்க்கத்தில் திளைத்த பலருக்கு கேட்டாலே மன அமைதியை தரும் பாடலாக அது திகழ்ந்து வருகிறது. 1964 ஆம் ஆண்டு வெளியான பாடல் அது என்றாலும் கூட 60 ஆண்டுகள் கழித்தும் கண்ணதாசனின் வரிகள் அவ்வளவு புதுமையாக அவ்வளவு உணர்வுபூர்வமாக அந்த பாடல் அமைக்கப்பட்டு இருக்கும்.
44
Sivaji ganesan
கடந்த 1964 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "ஆண்டவன் கட்டளை". இந்த திரைப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள், இந்த ஆறு பாடல்களுக்கும் வரிகளை எழுதியது கண்ணதாசன் தான். இந்த படத்தில் உருவான ஒரு பாடல் தான் ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு என்கின்ற பாடல். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அமைந்த இந்த பாடலில் மொத்தம் 8 திருகுறள்களை பாடல் வரிகளாக அவர் பயன்படுத்தியிருப்பார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.