இலங்கையில் வாழும் சூழல் ஏற்பட்டதால், சந்திரபாபு படித்து வளர்ந்தது அனைத்தும் கொழும்பில் தான். பின்னர் சந்திரபாபுவின் குடும்பம் 1943 ஆம் ஆண்டு, சென்னையில் குடி ஏறினர். சென்னையில் குடி ஏறிய பின்னர் சந்திரபாபுவின் தந்தை, தினமணி பத்திரிக்கையில் தான் பணியாற்றினார். மேலும் சிறு வயதில் இருந்தே, நாடகங்கள் மீதும், நடிப்பு மீதும், சந்திரபாபுவுக்கு இருந்த காத்ததால் தன்னை ஒரு நடிகராக நிலை நிறுத்திக் கொள்ள, வேண்டும் என்கிற உணர்வை தூண்டியது. நடிக்க வாய்ப்பு கேட்டு பல சினிமா கம்பெனிகள் ஏறி இறங்கினார். வாய்ப்பு கொடுக்கப்படாததால், தன் வாய்ப்பு கேட்டு அலைந்த சினிமா கம்பெனி முன்பே தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனால் இவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் வரை, இந்த வழக்கு சென்றது. அப்போது நீதிபதியின் முன்னர் தீக்குச்சி ஒன்றால்... கையில் சுட்டு கொண்டு, நீதிபதியின் முன்பு காட்டி, உங்களுக்கு என் கையில் உள்ள காயம் தான் தெரியும், ஆனால் அதன் வலியையும், வேதனையையும் உங்களால் உணர முடியாது என கூறியுள்ளார். இதனால் நீதிபதியே ஆச்சர்யமடைந்தார்.
இது வீடா.. இல்ல மாடர்ன் அரண்மனையா! மதுரையில் மாஸாக நடிகர் சசிகுமார் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடு