ஜீவானந்தம் பெயரை கேட்டதுமே ஷாக்கான கெளதம்.! அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட்.. குணசேகரனுக்கு காத்திருக்கும் இடி!

Published : Jul 10, 2023, 03:32 PM IST

'எதிர்நீச்சல்' சீரியலில், ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திடாத அடுத்தடுத்த ட்விஸ்டுகள் அரங்கேறி வருவதால், இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

PREV
16
ஜீவானந்தம் பெயரை கேட்டதுமே ஷாக்கான கெளதம்.! அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட்.. குணசேகரனுக்கு காத்திருக்கும் இடி!

கடந்த மூன்று வாரமாகவே, ஆதிரையின் திருமணம் குறித்த காட்சிகள் ரசிகர்களை சற்று சலிப்பு தட்ட வைத்த நிலையில், ஒரு வழியாக கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஆதிரையின் அதிர்ச்சி திருமணம் அரங்கேறியது. ரசிகர்கள் அனைவரும் ஆதிரையை அருண் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறி வந்த நிலையில், குணசேகரனின் ஆசைப்படி கரிகாலனுக்கும், ஆதிரைக்கும் திருமணம் நடுரோட்டிலேயே முடிந்தது.

26

திருமணத்திற்கு பின்னர் ஆதிரையை சுற்றி சுற்றி வந்து கரிகாலன் செய்யும் சேட்டைகள், ஒருபுறம் சிரிப்பை வர வைக்கும் படி இருந்தாலும், மற்றொருபுறம் இந்த சீரியலில் சில அதிரடி விஷயங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

நடிகர் கார்த்தி மகள் உமையாள் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா? வெளியான லேட்டஸ்ட் போட்டோ..!

36

இதுநாள் வரை குணசேகரன், என்ன சொன்னாலும்... செய்தாலும் அடங்கி போன ரேணுகா, ஈஸ்வரி, மற்றும் நந்தி ஆகியோர் தற்போது அவரை எதிர்க்க துவங்கி விட்டனர். தன்னுடைய கணவர் சம்பாதித்யம் இல்லாத போது... தன்னுடைய மகள் அரசு பள்ளியில் படிக்கட்டும் என ரேணுகா முடிவெடுத்து அதனை செயல் படுத்தவும் துணிந்து விட்டார். ஆனால் குணசேகரன், தன் வீட்டு பிள்ளை அரசு பள்ளியில் படித்தால் எனக்கு தான் அசிங்கம் அதுக்கு அவ பள்ளிக்கு போகாம இருந்தால் கூட பரவாயில்லை என கூறுகிறார்.

46

தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருக்கும் ரேணுகா, மகளை அழைத்து கொண்டு... ஆட்டோவில் அரசுக்கு பள்ளியில் சேர்ந்து விட செல்கிறார். மேலும் இனி, இவங்ககிட்ட எல்லாம் எதையம் கேட்டு விட்டு முடிவு பண்ண கூடாது ஜஸ்ட் இன்பர்மேஷன் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என கூறி மகளை ஆட்டோவில் அழைத்து கொண்டு அரசு பள்ளியில் சேர்க்க செல்கிறார்.

மெழுகு டால்லு நீ... அழகு ஸ்கூல்லு நீ... பிரகாசமான அழகில் பிறந்தநாள் கொண்டாடிய அதிதி ஷங்கர்! போட்டோஸ்..!

56

இதை தொடர்ந்து, ஜீவானந்தம் பற்றி விசாரிக்க துவங்கி விட்டனர் சக்தி மற்றும் ஜனனி.  இருவரும் கௌதமை பார்க்க நேரிட, அவரிடம் அப்பத்தா கண் முழிக்கும் போதெல்லாம் ஜீவானந்தம் என்கிற பெயரை கூறுகிறார் என கூறுகிறார்கள்... ஜீவானந்தம் என்கிற பெயரை கேட்டதுமே கௌதமுக்கு தேள் கொட்டியது ஆகிறது. ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% ஷேரும் தன்னுடைய பேருக்கு மாற வேண்டும், என்று கூறி அந்த பொறுப்பை கௌதமிடம் தான் ஒப்படைத்துள்ளார்... எனவே அடுத்து கெளதம் என்ன செய்ய போகிறார் என்பது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. தோழிக்காக ஜீவானந்தத்தை கௌதம் காட்டிக் கொடுப்பாரா? அல்லது தன்னுடைய கொள்கை தான் முக்கியம் என தோழி ஜனனியை பழிவாங்குவாரா என்பது  வரும் நாட்களில் தெரியவரும் அதே போல் ஜனனி மற்றும் சக்தியின் கேள்விகளுக்கு கௌதம் என்ன பதில் சொல்வார் என்பதும் இன்று தெரியவரும்.
 

66

அதேபோல் இத்தனை நாள் குணசேகரன் பேச்சுக்கு அடங்கிக் இருந்த மருமகள்கள் அவரையே எதிர்க்க துவங்கி விட்டனர். இது குணசேகரனுக்கு பேரிடி என கூறலாம்... அதே போல் இந்த சொத்து விஷயத்தை ஜனனியை தாண்டி எப்படி ஜீவனந்தத்தை... குணசேகரன் சமாளிப்பார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் பாவனிக்கு என்ன ஆச்சு? திடீர் என நடந்த அறுவை சிகிச்சை... புகைப்படத்துடன் கூறிய அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories