பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஆரவ் வென்றார். இதையடுத்து ரித்விகா இரண்டாவது சீசனையும், முகென் ராவ் மூன்றாவது சீசனையும், ஆரி நான்காவது சீசனையும், ராஜு ஐந்தாவது சீசனையும் வென்று டைட்டில் வின்னர்களாகினர். அதேபோல் கடைசியாக நடந்து முடிந்த ஆறாவது சீசனில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார்.