எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக மிரட்டி வரும் எஸ்.கே.ஆர், நிஜத்தில் ஒரு பிசினஸ்மேன் என்பது தான் பலரும் அறிந்திடாத ஒரு ஆச்சர்யமான விஷயமாகும். கேரளாவை சேர்ந்தவரான இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெற்றிகரமாக பிசினஸ் நடத்தி வருகிறாராம். பிசினஸில் நன்கு சம்பாதித்தாலும், தன்னுள் இருக்கும் நடிப்புத்திறமையை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என துடித்த வாசுதேவனுக்கு, இயக்குனர் திருச்செல்வத்தின் மூலம் தான் இந்த எதிர்நீச்சல் வாய்ப்பு கிடைத்துள்ளது. கிடைத்த முதல் வாய்ப்பையே நன்கு பயன்படுத்திக்கொண்ட வாசுதேவனுக்கு, அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறதாம்.
இதையும் படியுங்கள்... வழக்கு தள்ளுபடி... சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செம்ம ஹாப்பி