சாதிவெறி பிடித்தவள் என விமர்சிக்கிறார்கள்.. இரவின் நிழல் நாயகியின் உருக்கமான பேட்டி!

Published : Jul 18, 2022, 07:13 PM IST

சரியான விளக்கத்தை சொல்லாமல் விட்டது என்னுடைய தவறுதான். தப்பாக பேசி இருக்கக் கூடாது. தெரியாமல் பேசி விட்டேன். என்னை மன்னிக்க வேண்டும் என பிரிகிடா கேட்டுக் கொண்டுள்ளார்

PREV
14
சாதிவெறி பிடித்தவள் என விமர்சிக்கிறார்கள்.. இரவின் நிழல் நாயகியின் உருக்கமான பேட்டி!
iravin-nizhal

சமீபத்தில் பாராட்டுகளைப் பெற்று வரும் இரவில் நிழல் படத்தின் ஒன் லீனர் சிங்கிள் ஷாட் மூவியாக உருவாகியுள்ளது. உலகின் முதல் சாதனை என பாராட்டப்பட்டு வரும் இந்த படத்தை பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்துள்ளார். புது முகங்கள் பலரும் அறிமுகமாகியுள்ள இரவில் நிழல் படம் 90 நாட்கள் ஒத்திகைக்கு பிறகு படமாக்கப்பட்டுள்ளது. 70 ஏக்கர் நிலத்தில் 50க்கும் மேற்பட்ட செட்டுகள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...திரைப்பட டிஜிட்டல் திருட்டு ..அதிரடியாக களம் இறங்கிய அருண் விஜய்!

இந்த படம் குறித்த பாராட்டுகள் எழுந்து இதே வேளையில் அதே அளவு விமர்சனங்களையும் பெற்று வருகிறது. முன்னதாக ப்ளூ சட்டை மாறன் இந்த படம் முதல் நான் லீனர் சிங்கிள் ஷாட் என கூறப்படுவது பொய் என விமர்சித்திருந்தார். இந்நிலைகள் இதில் நடித்த பிரிகிடா கூறிய கருத்து சர்ச்சையின் உச்சமாகியுள்ளது.

24

இரவில் நிழல் படத்தில் இடம் பெற்றுள்ள மோசமான வார்த்தைகள் குறித்து கேள்வி எழுந்தது. இது குறித்த பேட்டிகள் பேசியிருந்த பிரிகிடா, "படத்தின் கதையே தனி ஒருவனை பற்றியதுதான் அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டுமே தான் நடந்திருக்கிறது என்றால் அதனை ராவாகத்தான் சொல்ல முடியும். ஒரு சேரி பகுதிக்கு போயிருக்கோம் என்றால் அங்கு கெட்ட வார்த்தைகள் மட்டுமே தான் பேசப்படும் சினிமாவுக்காக யாரையும் ஏமாற்ற முடியாது என கூறினார்.

மேலும் செய்திகளுக்கு...பிளாக் அண்ட் ஒயிட்டில் போல்ட் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே..வைரல் போட்டோஸ் இதோ! 

34
brigida saga

அவர் சேரியில் கெட்ட வார்த்தை பேசப்படும் என கூறியது மிகுந்த எதிர்ப்பிற்கு உள்ளாகி, பிரிகிடாவை  கைது செய்ய வேண்டும் எண்ணும் அளவிற்கு எதிர்ப்பை கிளப்பி வருகிறார்கள். நெட்டிசன்கள் இது குறித்து இயக்குனர் பார்த்திபன் பிரிகிடாவிற்காக மன்னிப்பு கேட்பதாகவும் நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989 இல் நடக்கும் கதை இது 2022ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம் கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...இந்நாளில் மறைந்த கவிஞர் வாலி... எழுத்துக்களால் சிகரம் படைத்தவரின் வெற்றி வரிகள் !

44
brigida saga

இந்நிலைகள் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள பிரிகிடா, " தான் வேண்டும் என்று அவ்வாறு பேசவில்லை என்றும் இரண்டு எடுத்துக்காட்டுகளை சேர்த்து கூறியிருந்தால் அந்த வார்த்தை தவறாக தோன்றியிருக்காது. அரெஸ்ட் பிரகிடா என ட்விட்டரில் இரண்டாகும் ஹேஷ் டேக்கை பார்க்கும் பொழுது தனக்கு மிகுந்த மன வலி ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 அதோடு தனது முதல் அறிமுகப்படம் இது. சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் வருத்தமாக இருக்கிறேன் அப்படி பேசியதற்கு என் மீது தான் எனக்கு கோபம். என்னை ஜாதி வெறி பிடித்தவள் என விமர்சிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார். இரவின் நிழல் ஷ்லம் ஏரியாவில் எடுக்கப்பட்டுள்ளது படத்தில் நிறைய லொகேஷன்கள் வருகின்றன. லொகேஷன் முடியும் அதைத்தான் ரொம்ப ராவா இருக்கும் என்று சொல்லிவிட்டேன். சரியான விளக்கத்தை சொல்லாமல் விட்டது என்னுடைய தவறுதான். தப்பாக பேசி இருக்கக் கூடாது. தெரியாமல் பேசி விட்டேன். என்னை மன்னிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories