அன்பு செழியனுக்கு சொந்தமாக சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அவரது குடும்ப உறவினர்கள் என 10 க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அன்பு செழியனுக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து, சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த, சுமார் 13 கோடி பணம் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சிக்கியுள்ள இந்த பணம் கணக்கில் வரவு வைக்கப்படாத பணம் என்றும், சினிமா தயாரிப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: செல்வம் பெருக ஆடி பெருக்கு அன்று.. இந்த 5 பொருட்களை கட்டாயம் பூஜையில் வையுங்கள்!