பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மல்லிகா ஷெராவத். இவர் தமிழிலும் கமல்ஹாசனின் தசாவதாரம் படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் வில்லியாக நடித்திருந்த இவர், அதன்பின் கடந்த 2011-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கலாசலா என்கிற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார்.
பாலிவுட்டில் அவர் நடிப்பில் தற்போது ஆர்.கே/ஆர்.கே என்கிற திரைப்படம் தற்போது உருவாகி உள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மல்லிகா ஷெராவத், தான் முன்னணி நடிகர்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர்கள் தனக்கு பட வாய்ப்பு தரவில்லை என கூறியுள்ளார். மேலும் அவர்களை பொறுத்தவரை நடிகைகள் என்றால் உட்காரு, எழு என்று எது சொன்னாலும் செய்யவேண்டும். என்னால் அப்படி இருக்க முடியாது.