காலத்தை வென்ற ராஜாவின் ஜனனி ஜகம் நீ பாடல்; உண்மையில் இப்பாடல் உருவாகவிருந்தது யார் குரலில் தெறியுமா?

First Published Oct 28, 2024, 7:52 PM IST

Ilayaraja : இன்றளவும் பலருடைய ப்ளே லிஸ்டில் இருக்கும் "ஜனனி ஜகம் நீ" பாடல் உண்மையாகவே இளையராஜா குரலில் வெளியாக இருந்த பாடல் அல்ல.

Ilayaraja

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த இசையமைப்பாளராகவும், மிகச் சிறந்த பாடகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இசைஞானி இளையராஜா. 5 தேசிய விருதுகளை வென்ற மாமேதை அவர். இந்திய மொழிகள் பலவற்றுள் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். தமிழில் இந்த 45 ஆண்டுகளில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வெளியாகி இருந்தாலும், இசை ஞானி இளையராஜா தான் அவர்களில் எப்பொழுதும் டாப் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் என்றால் அது மிகையல்ல.

சிக்கலில் ஷில்பா ஷெட்டி ரெஸ்டாரண்ட்; "80 லட்சத்தால்" வந்த தலைவலி - அப்படி என்ன ஆச்சு?

Music Director Ilayaraja

1976ம் ஆண்டு வெளியான "அன்னக்கிளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார் இளையராஜா. இவருடைய குடும்பத்தை பொறுத்தவரை தம்பி கங்கை அமரன், மூத்த மகன் கார்த்திக் ராஜா, மகள் மறைந்த பாடகி பவதாரணி, இளைய மகன் யுவன் சங்கர் ராஜா என்று அனைவருமே இசைத்துறையில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைக்கனம் கொண்டவர் இளையராஜா என்று பலரும் கூறுகின்ற வேளையில், இவ்வளவு திறமையோடு உள்ள ஒரு மனிதன் கொஞ்சம் தலைகனத்தோடு இருந்தால் தான் என்ன தப்பு என்பது தான் அவருடைய ரசிகர்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு பாடலுக்கும் தன்னுடைய ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பை கொடுத்து இசையமைக்கும் திறன் கொண்டவர் இளையராஜா.

Latest Videos


Isaignani

இந்த சூழலில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "தாய் மூகாம்பிகை". இந்த திரைப்படத்தில் அம்மனாக கே.ஆர் விஜயா நடித்து அசத்தியிருப்பார். அது மட்டுமல்ல இசை ஞானி இளையராஜாவின் அற்புதமான இசையில் இந்த திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் ஒலித்தது. 1980களின் தொடக்கத்தில் மிகச் சிறந்த இயக்குனராக வலம் வந்த சங்கரின் இயக்கத்தில் சிவப்பிரசாத் என்பவருடைய தயாரிப்பில் கார்த்திக், சிவகுமார், கே.ஆர் விஜயா, ஜெய்சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் எம்.என் நம்பியார் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். 

இந்த திரைப்படத்தில் ஒலித்தது தான் "ஜனனி ஜனனி, ஜகம் நீ அகம் நீ" என்கின்ற பாடல். உண்மையில் இந்த பாடலை கேட்டு கண் கலங்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாக அமைந்திருக்கும் இந்த பாடல். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், இளையராஜாவின் இசையும் அவருடைய குரலும் தான் என்றால் அது சற்றும் மிகையல்ல.

Janani Janani Song

ஆனால் உண்மையில் இந்த பாடலை இந்த திரைப்படத்திற்காக பாட இருந்தது இளையராஜா இல்லை என்கின்ற சில தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. சங்கரின் மேற்பார்வையில் இளையராஜா இந்த திரைப்படத்திற்கான இசையை அமைத்திருக்கிறார். அப்பொழுது காட்சி அமைப்புகளுக்காக சற்று மாற்றி அமைக்கப்பட்டு வாலி புதிதாக எழுதிய ஒரு பாடல் தான் ஜனனி ஜகம் நீ என்கின்ற பாடல். தெய்வத்தை நோக்கி மிகவும் உருகி பாடும் பாடல் என்பதால் முதலில் இப்பாடலைப் பாட ஏசுதாஸை தான் பட குழு அணுகி இருந்திருக்கிறார்கள். 

ஆனால் அப்போது அவர் வெளிநாட்டில் வேறு ஒரு ரெக்கார்டிங்கில் இருந்த நிலையில், அவர் வருவதற்குள் மெட்டுக்களை அமைத்து தயாராக வைத்திருந்தால், ஏசுதாஸ் வந்தவுடன் ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் டம்மி ட்ராக் பாடும் பொழுது ஜனனி பாடலில் இளையராஜாவின் குரலை கேட்டு மெய்மறந்த படக்குழு முழு பாடலை அவர் குரலிலேயே ஒளிப்பதிவு செய்தது. 

பிசினஸில் அம்பானி வாரிசுடன் கை கோர்த்த நயன்தாரா! பக்கா பிளானுடன் போட்ட புது டீலிங்?

click me!