இன்று தமிழ் சினிமாவில் 100 கோடி வரை சம்பளம் பெரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் சிறு வயதில், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தான் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். தற்போது அந்த வீட்டில் விஜய் மற்றும் அவரது பெற்றோர் வசிக்கவில்லை என்றாலும், சாலிகிராமத்தில் உள்ள வீட்டை, தன்னுடைய அலுவலகமாக மாற்றி வைத்துள்ளார் எஸ்.ஏ.சி. இந்நிலையில் திடீர் என இவரது அலுவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவிட்டது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.