அட கடவுளே.. ரூ.76,000 கொடுக்காததால் விஜய் வாழ்ந்த வீட்டின் மீது சொத்து பறிமுதல் நடவடிக்கை- நீதிமன்றம் உத்தரவு!

Published : Aug 01, 2022, 10:32 PM ISTUpdated : Aug 02, 2022, 10:04 AM IST

தளபதி விஜய் சிறுவயதில் இருந்து வாழ்ந்து வந்த வீட்டில் உள்ள பொருட்களை வெறும் ரூ.76,000 கொடுக்காததால் ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுளளது.  

PREV
14
அட கடவுளே.. ரூ.76,000 கொடுக்காததால் விஜய் வாழ்ந்த வீட்டின் மீது சொத்து பறிமுதல் நடவடிக்கை- நீதிமன்றம் உத்தரவு!

இன்று தமிழ் சினிமாவில் 100 கோடி வரை சம்பளம் பெரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் சிறு வயதில், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தான் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். தற்போது அந்த வீட்டில் விஜய் மற்றும் அவரது பெற்றோர் வசிக்கவில்லை என்றாலும், சாலிகிராமத்தில் உள்ள வீட்டை, தன்னுடைய அலுவலகமாக மாற்றி வைத்துள்ளார் எஸ்.ஏ.சி. இந்நிலையில் திடீர் என இவரது அலுவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவிட்டது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

24

பிரபல இயக்குனரும், விஜய்யின்  தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2011 ஆம், சத்யராஜ், விக்ராந்த், பானு, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ’சட்டப்படி குற்றம்’. இந்த படத்தை விளம்பரம் செய்வதற்காக சரவணன் என்பவருடன் எஸ்.ஏ.சி ஒப்பந்தம் செய்த நிலையில்,  ஒப்பந்தப்படி விளம்பரத்திற்கான பணத்தை சரவணன் பலமுறை எஸ்.ஏ.சி-யிடம் கேட்டும் வர தரவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இது குறித்து சரவணன் தனக்கான பணத்தை பெற்று தரவேண்டும் என  கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

மேலும் செய்திகள்:  தளபதி 67 அப்டேட்டோட தான் திரும்பி வருவேன் - ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்
 

34

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பணத்தை உடனே செலுத்த உத்தரவிட்டது. இருப்பினும் எஸ்.ஏ.சி பணத்தை கொடுக்காததால், தற்போது சாலிகிராமத்தில் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

44

தற்போது எஸ்.ஏ.சியின் அலுவலகமாக இருக்கும் வீடுதான் விஜய், மற்றும் அவரது பெற்றோர் பல வருடங்களாக வாழ்ந்த வீடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெறும் 76 ஆறாயிரத்து 122 ரூபாய் செலுத்தவில்லை என்பதற்காக விஜய் வசித்த வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்திக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கையில் பணம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாததால் தான் இந்த நிலை என நெட்டிசன்கள் எஸ்.ஏ.சி-யை விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்:  என்னது ‘விக்கி’ பிரபுதேவா மாதிரி இருக்குறதுனால தான் நயன்தாரா லவ் பண்ணாங்களா! புது குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்
 

Read more Photos on
click me!

Recommended Stories