இந்த சொத்தை வாங்கியது எப்படி என்பது பற்றி மணிகண்டன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதன்படி சுந்தர் பிச்சை வாழ்ந்த வீடு என தெரிந்ததும், அதனை வாங்க முடிவு செய்தாராம் மணிகண்டன். சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாத பிச்சை வாங்கிய முதல் சொத்து இது என்பதால் அவர் பெயரில் தான் இந்த வீடு இருந்ததாம். அவர் அமெரிக்காவில் இருந்ததால் இந்த வீட்டை வாங்குவதற்கான பணிகளை முடிக்க 4 மாதங்கள் ஆனதாம்.