இந்த போதைப்பொருள் வழக்கில் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட சவுமியா சிங், சித்தார்த் ஷா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த வழக்கில் தொடர்புடைய கோசாவி என்பவர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் சமீர் வான்கடே என்கிற முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி உடந்தையாக இருந்ததாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.