கொஞ்சம் கூட நன்றி இல்லாதவர் அந்த கவுண்டமணி! காசுக்காக இப்படியா? கங்கை அமரன் கூறிய ஷாக்கிங் தகவல்!

Published : May 10, 2023, 11:39 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்த, நடிகர் கவுண்டமணி பற்றி கங்கை அமரன் கூறி உள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

PREV
17
கொஞ்சம் கூட நன்றி இல்லாதவர் அந்த கவுண்டமணி! காசுக்காக இப்படியா? கங்கை அமரன் கூறிய ஷாக்கிங் தகவல்!

மேடை நாடங்களில் நடித்து, பின்னர் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கவுண்டமணி. ஆரம்ப காலத்தில் பல்வேறு கஷ்டங்களைக் கடந்து தான் திரையுலகில் இவரால் நிலையான இடத்தை பிடிக்க முடிந்தது. இவரை ரசிகர்கள் காமெடி கிங் என அழைத்தாலும், காமெடியை தாண்டி குணச்சித்திரம், வில்லன், ஹீரோ, என பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியவர்.

27

குறிப்பாக நடிகர் செந்திலுடன் இவர் இணைந்து நடித்த ஒவ்வொரு காமெடி காட்சிகளும், 80 மற்றும் 90களில் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றன. எனவே இவர்களின் காமெடி தான் தங்களுடைய படங்களில் இடம்பெற வேண்டும் என எண்ணிய பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கூட உள்ளனர். நடிகர் செந்திலை விட பல மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கியவர் கவுண்டமணி. அவ்வளவு ஏன் ஹீரோக்களுக்கு இணையான சம்பளத்தை பெற்றவர் எனலாம்.

இரண்டாவது திருமண நாளில் கணவருடன் கொண்டாடிய கயல் ஆனந்தி! வைரலாகும் போட்டோஸ்!

37

ஒரு சில கிசுகிசுவில் இவர் சிக்கினாலும் பெரிதாக இவருடைய நடிப்பு அதனால் பாதிக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி கவுண்டமணி திரை உலகில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார். அவ்வப்போது ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
 

47

அவ்வப்போது கவுண்டமணி குறித்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,  பிரபல இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் கவுண்டமணி குறித்து கூறியுள்ளது உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புது கார் வாங்கிய ஜோரில்.! கார் மேல் படுத்து வளைய வளைய போஸ் கொடுத்த பிக்பாஸ் ரக்ஷிதா!

57

நடிகர் கவுண்டமணியை கரகாட்டக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததே கங்கை அமரன் தான். இந்த படத்திற்கு பின்னர் தான் கவுண்டமணிக்கு அடுத்தடுத்த பல படங்களில் நடித்த வாய்ப்புகளும் கிடைத்து பிஸியான நடிகராகவும் மாறினார்.

67

கவுண்டமணியுடனான நட்பின் காரணமாக கங்கை அமரன் இயக்கிய கோவில் காளை படத்தில், அவரை காமெடி வேடத்தில் நடிக்க வைத்துள்ளார். அப்போது தயாரிப்பாளருக்கு மிகுந்த பண நெருக்கடி இருந்துள்ளது. எங்கே தன்னுடைய சம்பள பணம் கிடைக்காமல் போய்விடப்போகிறது என, தன்னுடைய சம்பளம் வந்தால் மட்டுமே டப்பிங் பேச வருவேன் என இயக்குனரிடமும், தயாரிப்பாளரிடமும் மிகவும் கறாராக பேசினாராம்.

ஆசைக்கு அளவு வேண்டாமா? ஒரே ஒரு ஹிட்... தாறுமாறா சம்பளத்தை உயர்த்திய கவின்! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

77

படப்பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், தயாரிப்பாளரும் கடன் உடன் பட்டு அவருடைய சம்பளப் பழத்தை முழுவதையும் கொடுத்து, கவுண்டமணியை டப்பிங் பேச வைத்தாராம். இது குறித்து கங்கை அமரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் கவுண்டமணிக்கு பல படங்களில் நான் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறேன், ஆனால் அந்த நன்றி கூட இல்லாமல்... என்னை அவமானப்படுத்தி விட்டார். என வருத்தத்துடன் பேசி உள்ளார். 
 

Read more Photos on
click me!

Recommended Stories