துணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை, கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பின்னர், இவருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் குழந்தைக்கு தாயான விஷயத்தைப் பற்றி பெரிதாக எந்த இடத்திலும் பேசாத ஆனந்தி, சமீபத்தில் ராவணக் கூட்டம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தன்னுடைய குழந்தைக்கு ஜாதி இல்லா சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.