சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான ரோபோ சங்கர் தற்போது சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். தனுஷ் உடன் மாரி, அஜித் உடன் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த ரோபோ சங்கர் தற்போது ரஜினியின் ஜெயிலர் உள்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரோபோ சங்கரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.