ராதாமோகன் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான பயணம் படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியது மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் த.செ.ஞானவேல். இதையடுத்து பிரகாஷ் ராஜ் இயக்கிய தோனி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ஞானவேல், கடந்த 2017--ம் ஆண்டு அசோக் செல்வன், பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த கூட்டத்தில் ஒருவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆனார்.