ஃபஹத் மற்றும் வடிவேலுவின் நடிப்பு படத்திற்குப் பலமாக இருந்தது. உணர்வுபூர்வமான காட்சிகளுடன், த்ரில்லர் அம்சங்களும் கொண்ட படத்திற்குக் கதை, திரைக்கதை எழுதியவர் வி. கிருஷ்ணமூர்த்தி. கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்ரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இ ஃபோர் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த இப்படத்திற்கு ஒளிப்பதிவு கலைச்செல்வன் சிவாஜி, இசை யுவன் சங்கர் ராஜா, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொண்டு இருந்தார்.