அதற்கு இயக்குனரும் அசால்டாக, உங்களுக்கு ஓகே என்றால் போட்டுக் கொள்ளுங்கள் என கூறினார். இதற்க்கு முன்னர் வெற்றிலை - பாக்கு போட்டு அனுபவம் இல்லாத விஜே காயத்ரி, இந்த கேரக்டருக்காக வெற்றிலை பாக்கு போட்டவுடன் வாய் முழுவதும் வெந்து போய் உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஷூட்டிங் இருந்ததால், இந்த இரண்டு நாட்களுமே அவர் வெற்றிலை பாக்கு போட்டு கொண்டு நடித்துள்ளார். எனவே வாயில் எரிச்சல் தாங்க முடியாமல், அந்த இரண்டு நாட்களுமே ஷூட்டிங் முடிந்ததும் மருத்துவமனைக்கு ஓடியதாக, சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் முதல் நாளில் தன்னுடைய நடிப்பை பார்த்து வியந்து, மாரிமுத்து தன்னை பாராட்டியதாக கூறியுள்ளார்.