'ஐயா' படத்திற்கு முன்பு பார்த்திபனுடன் நடிக்க இருந்த நயன்! நீ வரவே வேண்டாம் என துரத்தி விட்ட சம்பவம்!

Published : Aug 23, 2023, 09:36 PM ISTUpdated : Aug 23, 2023, 09:39 PM IST

நடிகை நயன்தாரா ஐயா படத்திற்கு முன், இயக்குனர் பார்த்திபன் நடித்து இயக்கிய படத்தில் அறிமுகமாக இருந்த தகவலை பார்த்திபன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  

PREV
16
'ஐயா' படத்திற்கு முன்பு பார்த்திபனுடன் நடிக்க இருந்த நயன்!  நீ வரவே வேண்டாம் என துரத்தி விட்ட சம்பவம்!

கோலிவுட் திரை உலகில், லேடிஸ் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, 'ஐயா' படத்திற்கு முன்னர் பார்த்திபன் இயக்கி - நடித்த படத்தில், நடிக்க இருந்த நிலையில், அவரை பார்த்திபன் நடிக்க வேண்டாம் என ரிஜெக்ட் செய்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

26

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல், ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் நயன்தாரா... தமிழ் மொழி ரசிகர்கள் மத்தியில், லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அன்புடன் அழைக்கப்படுகிறார். காரணம் முன்னணி ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக, இவர் நடித்த மாயா, கோலமாவு கோகிலா, போன்ற படங்கள் வசூல் செய்து கெத்து காட்டியது மட்டும் இன்றி இவரின் மார்க்கெட்டயும் எகிற செய்தது.

'சந்திராயன் 3' எங்கள் பெருமை... சிம்பு, மாதவன், குஷ்பு உட்பட பல பிரபலங்கள் வாழ்த்துக்களுடன் போட்ட பதிவு!
 

36

இந்நிலையில் கடந்த ஆண்டு நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, திருமணமான நான்கே மாதத்தில்...  வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் இவர், தற்போது நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
 

46

நயன்தாரா தன்னுடைய முதல் பாலிவுட் படத்திலேயே ஷாரூக்கானுடன் ஜோடி போடும் அளவுக்கு உயர அவர் பட்ட கஷ்டம் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. பல்வேறு விமர்சனங்கள், காதல் சர்ச்சைகள், வலி, வேதனை, என அனைத்தையும் கடந்து தான் நயன்தாரா தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். விரைவில் நயன்தாரா தன்னுடைய 75வது படத்திலும் நடிக்க உள்ளார்.

ஜகஜால கில்லாடி! ஒருமுறை... இரண்டு முறை அல்ல! 4 முறை பெயரை மாற்றிய 'ஜெயிலர்' பட ரஜினி மருமகள் மிர்ணா!
 

56

இந்நிலையில் இவருடைய முதல் படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நயன்தாரா தமிழில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தில் அறிமுகமானவர் என்பது நமக்கு தெரிந்திருந்தாலும், இந்த படத்தில் கமிட் ஆவதற்கு முன்பு... நடிகர் பார்த்திபன் இயக்கி - நடித்த 'குடைக்குள் மழை' படத்தில் தான் நடிக்க இருந்தாராம்.
 

66

நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் நயன்தாரா முதலில் வருவதாக கூறிவிட்டு, பின்னர் போன் செய்து என்னால் நேற்று வர முடியவில்லை என்றும், நாளை காலை கண்டிப்பாக வந்து விடுகிறேன் என கூறியுள்ளார். பார்த்திபன் ஏதோ கோபத்தில் இருக்கும் போது நயன்தாரா இப்படி பேச...  "இல்ல நீங்க வரவே வேண்டாம்" என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாராம். இந்த தகவலை அவரே சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று கூறியுள்ளார். ஒரு வேலை பார்த்திபனின் குடைக்குள் மழை படத்தில் நயன்தாரா நடித்திருந்தால் அதுதான் அவரது முதல் படமாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவானந்தத்தின் மறுபக்கத்தை கூறிய ஜனனி..! மனம் உடைந்த ஈஸ்வரி..? முன்னாள் காதலன் பற்றி வாய்திறப்பாரா!
 

Read more Photos on
click me!

Recommended Stories