புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமீர், பள்ளி மாணவிகள் மரணம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இது மாநில அரசுக்கு பெருத்த அவமானம். திமுக அதிமுக என எந்த கட்சி இருந்தாலும் இதே நிலைமை தான் தொடர்கிறது. இதனை பிரித்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. பள்ளி மாணவிகள் தொடர் மரணத்திற்கும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாநில அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்படும்.
மேலும் செய்திகளுக்கு...தனுஷ் வீட்டில் விசேஷம்...குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய.....வைரல் போட்டோஸ் இதோ!
பள்ளி நிர்வாகத்தின் மீது எடுக்கும் நடவடிக்கைகளை விட போராட்டக்காரர்கள் மீது எடுக்கும் நடவடிக்கையை அதிகமாக உள்ளது என கூறியுள்ளார். அதோடு ஒலிம்பியாட் போட்டி பற்றிய பேசியவர், தமிழகத்தில் ஒலிம்பியாட் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதற்காக தமிழக அரசுக்கும் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.