கொரோனா என்கிற பெயரைக் கேட்டாலே பலரும் பீதி அடையக் காரணம், அது ஏற்படுத்திய தாக்கம் தான். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் தீவிரமாக பரவத் தொடங்கிய கொரோனா, அதன் கோர முகத்தைக் காட்டியதோடு, பல லட்சம் உயிர்களையும் பறித்தது. பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு ஆகியவை விதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு தான் உலகமே மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.