பாலிவுட் திரைப்படங்கள், டிவி ஷோக்கள் என கலக்கி வந்தவர் நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீ வஸ்தவா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்த இவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது .
கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. அதோடு மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...அட இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போலிருக்கே..சினேகாவின் சூப்பர் கூல் போட்டோஸ்...
Image: Raju SrivastavaInstagram
சில நாட்களுக்கு முன்னர் அவர் சுயநிலவில் இல்லை என்றும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த பத்தாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ராஜூ உடல்நிலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி தாது ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அறிந்த அவரது பயிற்சியாளர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மாரடைப்பு என உறுதியானதை அடுத்து அவசர சிகிச்சையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...கோவில்கள் குறித்த சர்ச்சை கிளம்பியதால்...அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்யும் சூரி..
Image: Raju SrivastavaInstagram
சமீபத்திய புதுப்பிப்பின்படி ராஜு தொடர்ந்து வெண்டிலேட்டரில் தான் உள்ளாராம். மேலும் நகைச்சுவை நடிகர் ராஜுவின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுயநினைவு இன்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதய செயல்பாட்டை பராமரிக்க வழங்கப்பட்ட மருந்து மற்றும் சாதனங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளனதாம். ராஜூ ஸ்ரீ வஸ்தவாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் முன்னதாக அறிக்கை வெளியிட்டனர். அதில் "வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது உடல் நிலை சரியாக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு...ராக்கெட்ரி படத்தால் வீட்டை இழந்த மாதவன்? மேடியின் விளக்கம் இதோ
Image: Raju SrivastavaInstagram
நடிகை சம்பவ்னா சேத் தனது ட்விட்டரில், 'அனுப்பத்தில் அன்புள்ள அனைவருக்கும் ராஜூ ஸ்ரீ வஸ்தாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் விரைவில் குணமடைய பிரார்தனை செய்கிறோம். மருத்துவர்கள் அனைவரும் சிகிச்சை அளித்து தாங்கள் இயன்றவரை செய்து வருகின்றனர். அனைவருக்கும் நன்றி . தயவு செய்து வதந்திகளை போலி செய்திகளை புறக்கணிக்கவும் அவருக்காக பிரார்த்தனை செய்யவும் என குறிப்பிட்டிருந்தார்