சினிமா துறையில் நீங்கள் பல கஷ்டங்களை கடந்து இப்போது சாதித்துள்ளீர்கள்...ஆனால் இப்போதைய இளைஞர்கள் சின்ன விஷயங்களுக்கு கூட தற்கொலை முடிவை எடுக்கிறார்களே இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்கு... பதிலளித்த விக்ரம், இந்தத்தலைமுறை அப்படி ஆகிவிட்டார்கள். கண்டிப்பாக ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்பது அவசியமானது தான் அதற்காக படிக்க வேண்டும் என ப்ரெஷரை ஏற்றிக்கொள்ளாதீர்கள், ஒவ்வொரு முறை விழும் போதும் நாம் எழுந்திருக்க வேண்டும். என்னால் நடக்கவே முடியாது. ஆனால் நான் நடக்க ஆரம்பித்து பின் நடிக்கவும் ஆரம்பித்தேன் என தன்னையே உதாரணமாக கூறினார்.