Published : Aug 23, 2022, 04:35 PM ISTUpdated : Aug 23, 2022, 05:25 PM IST
கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாரதிராஜா சிகிச்சைக்கு பின் ஒரு நாள் மதுரையிலேயே தங்கி விட்டு அடுத்த நாள் சென்னை திரும்பி உள்ளார்.
16 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த இயக்குனராக அறிமுகமாகியிருந்தவர் பாரதிராஜா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்ட இவர் மண் வாசனை கலந்த படங்களை எடுத்து மனதை ஈர்த்தவர்.
ஆறு தேசிய திரைப்பட விருதுகளையும், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது என பல விருதுகளை தன் வாழ்நாளில் குவித்துள்ளார். பிரபல இயக்குனர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பாடம் இயக்கியுள்ளார்.
இவர் மூலம் திரைக்கு வந்த பல நடிகைகளும் முன்னணி நாயகிகளாக மிளிர்ந்து வந்தனர். மேலும் பத்மஸ்ரீ விருது வழங்கி இவரை கவுரவித்து இருந்தது இந்திய அரசு. 2004 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருது, 2005 ஆம் ஆண்டு சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் ஆப் லெட்டர்ஸ் கௌரவ பட்டம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்ட மணிமகுடங்களாகும்.
பாண்டியராஜன், ரஜினி, கமல் என முன்னணி நாயகர்களை கிராமத்து நாயகனாக மாற்றி மகிழ்ந்த பாரதிராஜாவின் பல படங்களும் இன்றும் நினைவில் என்று நீங்காதவை. கிழக்கே போகும் ரயில் மூலம் தான் ராதிகா அறிமுகம் ஆகிறார். அதேபோல கமலஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் படம் ரசிகர்களின் பெரும் வரலாற்றை பெற்றது.
சத்யராஜை வேறொரு கோணத்தில் காட்டிய படம் தான் அலைகள் ஓய்வதில்லை. முதல் மரியாதை என்னும் காதல் கீதத்தை கொடுத்து தேசிய விருதை தட்டிச் சென்ற இயக்குனரான பாரதிராஜா இறுதியாக 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மரியாதை என்னும் படத்தை இயக்கி இருந்தார். ஆனால் இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை.
இயக்கத்தோடு நடிப்பிலும் ஆர்வம் காட்டி வந்த இவர் தொடர்ந்து பல படங்களில் தோன்றி வந்தார். அதன்படி சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் நாயகனின் தந்தையாகவும், அதற்கடுத்தபடியாக ராக்கியில் முக்கிய நாயகனாகவும், குற்றம் குற்றமே என்னும் படத்திலும், சமீபத்தில் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாகவும் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிட்டார் .
44
Bharathiraja
சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி வரவேற்பு பெற்றுள்ளவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சமீப காலமாக தகவல்கள் பரவி வருகிறது. கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாரதிராஜா சிகிச்சைக்கு பின் ஒரு நாள் மதுரையிலேயே தங்கி விட்டு அடுத்த நாள் சென்னை திரும்பி உள்ளார்.
இந்நிலையில் இவருக்கு திடீரென அஜீரணக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் உள்ள உள்ள மருத்துவமனைகள் பரிசோதனைக்காக பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனைகள் இருப்பார் என பாரதிராஜா தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.