தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவர் மிஷ்கின். அவர் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படம் பிசாசு. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தையும் மிஷ்கின் தான் இயக்கி உள்ளார்.
அதன்படி பிசாசு 2 படத்தை வருகிற ஆகஸ்ட் 31ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. ஆனால் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 1 வாரம் மட்டுமே உள்ள நிலையில், படத்துக்கான புரமோஷன் பணிகளை படக்குழு இதுவரை தொடங்கவில்லை. இதனால் இப்படம் தள்ளிப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதற்கு விக்ரமின் கோப்ரா படம் தான் காரணம் என கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீசாகும் இப்படத்திற்கு அதிகளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதால், பிசாசு 2 படத்துக்கு போதிய அளவிலான திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். இதன் காரணமாகவே இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 9 அல்லது 10-ந் தேதி வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.
இதையும் படியுங்கள்... "இது எங்கள் பிரச்சனை "சிறை தண்டனை குறித்து தடாலடி அறிக்கை விட்ட லிங்குசாமி