தமிழ் சினிமாவில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம். எவ்வளவு கஷ்டமான ரோல் ஆக இருந்தாலும், அதனை அசால்டாக நடித்து அசத்தி வரும் விக்ரம், கடைசியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்தி இருந்தார். அப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக்குவித்தது.