இந்த படம் குறித்தும், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா. இப்படத்தின் அனுபவம் குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்றும், அவருடன் சேர்ந்து நடித்த அனுபவங்கள் தன்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் போது லிப்லாக் காட்சிகள் படமாக்கப்பட்டது. எனக்கு விக்ரம் முத்தம் கொடுத்த போது, ரொமான்ஸ் வரவில்லை வாந்தி தான் வந்தது என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர், அப்போ ஷூட்டிங் ஸ்பாட்டை நாறடித்து விட்டீர்களா? என கிண்டலாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.