பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் விக்ரமின் யதார்த்தமான பேச்சு அங்கு வந்திருந்தவர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.