தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் தமிழில் அறிமுகம் செய்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராயும் ஒருவர். மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், இதையடுத்து, அவர் இயக்கத்தில் குரு, இராவணன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் ஐஸ்வர்யா ராய் நல்ல பெயரையும் பல்வேறு விருதுகளையும் பெற்றுக் கொடுத்தன.