தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா, கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகை ஜோதிகாவுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் பிறந்தனர். இதையடுத்து குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன் செகண்ட் இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா.
24
அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர், அதன்பின் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நடிகர் சூர்யா உடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வரும் ஜோதிகா, அதன்மூலம் பல்வேறு தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.
அண்மையில் நடிகர் சூர்யாவுடன் மும்பையில் புதிதாக வீடு ஒன்று வாங்கி செட்டில் ஆனார் ஜோதிகா. குடும்ப பிரச்சனை காரணமாக அவர் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக தான் அங்கு செட்டில் ஆன தகவல் பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது நடிகை ஜோதிகா, பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
44
அதன்படி இந்தியில் விகாஸ் பாய் என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ள திரில்லர் திரைப்படத்தில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோருடன் நடிகை ஜோதிகாவும் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்மூலம் 25 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை ஜோதிகா இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதற்கு முன்னர் அவர் கடந்த 1998-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான டோலி சஜா கி ரக்னா என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.