தமிழ் சினிமாவில் காதல் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், தொழில்நுட்பமும் உணர்வுகளும் கைகோர்த்து ஒரு தலைமுறையையே கட்டிப்போட்ட திரைப்படங்கள் மிகச்சிலவே. அந்த வகையில், 1999-ம் ஆண்டு இயக்குநர் கதிர் இயக்கத்தில் வெளியான 'காதலர் தினம்' திரைப்படம், 90ஸ் கிட்ஸ் மட்டுமின்றி இன்றைய தலைமுறைக்கும் ஒரு ‘கல்ட் கிளாசிக்’. காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது மீண்டும் திரையரங்குகளில் பார்க்கிறோம்.
இத்திரைப்படம், உருவான விதம் குறித்த சுவாரஸ்யங்கள் வியக்க வைக்கின்றன. குறிப்பாக, பிரம்மாண்டத்திற்குப் பெயர்போன 'இந்தியன்' திரைப்படத்தையே பட்ஜெட்டில் மிஞ்சிய ஒரு காதல் படம் இது என்பது பலரும் அறியாத உண்மை. காதலின் ஆதி வேர் முதல் நவீன காலத்து இணையதளக் காதல் வரை அனைத்தையும் ஒரே புள்ளியில் இணைத்த அந்தப் படத்தின் பின்னணி கதையை இங்கே காண்போம்.
24
இந்தப் படத்திற்கு 'காதலர் தினம்' என்று பெயர் வைக்கப்பட்டது?
உலகில் ஆசிரியர் தினம், அன்னையர் தினம் எனப் பல தினங்கள் இருந்தாலும், எல்லாவற்றையும் விட உயர்ந்தது 'காதலர் தினம்' தான் என்று கூறும் இயக்குனர் கதிர், காதல்தான் மனிதகுலத்தையே நாகரிகப்படுத்தியதாக தெரிவிக்கிறார். கட்டுப்பாடற்ற ஆதி மனிதன், ஒரு பெண்ணின் அழகில் மயங்கி, அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடத் தொடங்கியபோதுதான் 'உறவுகள்' எனும் கட்டுப்பாடே உருவானதாகவும் எனவே இந்த இந்தப் படத்திற்கு 'காதலர் தினம்' என்று பெயர் வைத்ததாகவும் இயக்கனர் கதிர் கூறினார. இளைஞர்களுக்கு நாளைய கனவாகவும், பெரியவர்களுக்கு நேற்றைய நினைவாகவும் இருக்கும் காதலை, ஒரு "ஹை-டெக்" பின்னணியில் சொல்ல விரும்பினார் கதிர்.
34
பிரம்மாண்டத்தின் உச்சம்: 1 கோடி ரூபாய் செட்!
இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், படத்தின் தரத்திற்காகச் செலவு செய்யத் தயங்கவில்லை. உலகின் மிகப்பரபரப்பான இரயில் நிலையங்களில் ஒன்றான மும்பை விக்டோரியா டெர்மினஸை ஒரு வார காலத்திற்குப் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுத்தது படக்குழு.இப்படத்திற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது. இது குறித்து ஏ.எம். ரத்னம் கூறுகையில், "இந்தியன் படத்திற்குச் செய்ததை விட, இந்தப் படத்திற்கு அதிகமாகச் செலவு செய்கிறேன். காதல் படம் என்பதால் நான் கணக்குப் பார்க்கவில்லை" என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
1999 காதலர் தினத்தன்று இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. "ஒவ்வொரு காதலன், காதலி கையிலும் இந்தப் பாடல்கள் பரிசாக இருக்கும்" என இயக்குநர் கதிர் கூறியது போலவே, 'ரோஜா ரோஜா', 'ஓ மரியா' போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இன்றும் ஸ்பாடிஃபை போன்ற டிஜிட்டல் தளங்களில் இப்பாடல்கள் டாப் லிஸ்டில் இருப்பது இதன் வெற்றிக்குச் சான்று.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.