குடி போதைக்கு அடிமையான அர்ஜுன் ; லவ் பண்ணுறவங்களோடு தகராறு; ஆடுகளம் பரபரப்பு சீன் !

Published : Feb 13, 2026, 03:04 PM IST

Aadukalam Serial Today Epispde Feb 13 Promo : ஆடுகளம் சீரியலில் இன்றைய எபிசோடில் அர்ஜுன் போதை பழக்கத்திற்கு அடிமையான நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Aadukalam Serial Today Episode Feb 13

ஆடுகளம் சீரியல் சன் டிவியில் மதியம் 3 மணிக்கு விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிறது. இன்றைய ப்ரோமோவில் அர்ஜுன் மது அருந்திவிட்டு ஒரு பிறந்தநாள் பார்ட்டி நடைபெறும் இடத்திற்கு செல்கிறார் அங்கு சென்று ஒரு காதலர்கள் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். அங்கு அர்ஜுன் சென்று அந்த காதலர் கொடுக்க வைத்திருக்கும் ரோஜா பூவை பிச்சு போட்டு விடுகிறார். 

24
ஆடுகளம் சீரியல் இன்றைய எபிசோட் Feb 13

அவர் கொடுக்கும் காதலை தெரிவிக்கும் ஒரு காடை இரண்டாக கிழித்து கீழே போடுகிறார் இதைக் கண்ட அந்த காதலர்கள் கோபம் கொள்கின்றனர் எதுக்கு இப்படி எல்லாம் செய்றீங்க என்று கேட்டு திட்டுகின்றனர் அங்கு அர்ஜுன் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சத்யா அங்கு செல்கிறார் அப்போது ஏன் அர்ஜுன் இப்படி எல்லாம் செய்கிறாய் என்று கேட்க பாருங்க மேடம் எங்க கார்டு மற்றும் ரோஜாவெல்லாம் எப்படி பிச்சு போட்டு இருக்காருன்னு என்று சத்யாவிடம் பிரச்சனையை குறித்து சொல்ல நான் தான் செய்தேன் நான் தான் செய்தேன் என்று குடிபோதையில் உளறுகிறார் அர்ஜுன். அதன் பிறகு அர்ஜுன் டேய் லவ் மட்டும் பண்ணாதீங்க டா லவ் வாழ்க்கையே அழிக்கும் என்று தனது மனதில் உள்ள ஆதங்கத்தை அவர்களிடம் சொல்கிறார் அர்ஜுன் அதைக் கேட்டு சத்தியா மனமுடைகிறார். லவ் பண்ணாதீங்க டா. இவங்களா ஏமாத்திடுவாங்க டா என்றெல்லாம் மனதில் உள்ள கவலைகளை உளறுகிறார் அர்ஜுன் அதைக் கேட்டு சத்யா கவலை கொள்கிறார். அர்ஜுன் என்று சத்யா காத்த ஏ சத்யா எங்க இருந்து நீங்க வந்த நீ புத்திசாலி தான் என்று சத்யாவை கடுமையாக பேசுகிறார் அர்ஜுன்.

34
Aadukalam Serial Feb 13 Episode Highlights

என்ன நம்ப வச்சு லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கழுத்து அறுத்தவா நீ தானே அப்ப நீ தானே புத்திசாலி என்றெல்லாம் பேசுகிறார் அர்ஜவந்துதைக் கேட்டு சத்யா ஏன் இப்படி குடிச்சிட்டு வந்து பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க என்று சத்யா கேட்க இங்க பாருங்க மேடம் என் லவ்வருக்கு இன்னைக்கு பர்த்டே இப்போ பொக்கே குடுத்து என்னோட காதலை ப்ரொபோஸ் பண்ணலாம்னு நான் காபி ஷாப்ல செலிப்ரேட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது இவர் வந்து எங்கள லவ் பண்ண கூடாது நான் ஏமாத்திடுவேன் அதனால நீ விட்டுட்டு போயிரு என்றெல்லாம் என்னைய சொல்றாரு என அந்த பெண்மணி தனது ஆதங்கத்தை சத்யாவிடம் சொல்ல அர்ஜுன் அந்த காதலனின் கையைப் பிடித்துக் கொண்டு இவ என் தம்பி என் தம்பியை நான் தானே காப்பாத்தணும் இல்லனா அந்த பொண்ணு அவளை ஏமாத்திட்டு போயிட்டு வா என்று போதையில் அத்திமீறி பேசுகிறார் அர்ஜுன் அதைக் கேட்டு சத்யா அர்ஜுன் அவங்க கையை விடு என்று சொல்கிறார். அதன் பிறகு வீட்டிற்கு அழைத்து வந்து ஏன் இப்படியெல்லாம் இப்ப குடிக்க ஆரம்பிச்சுட்ட குடிக்கு இப்படி அடிமையாகிட்டியே என்றெல்லாம் சத்தியா கேட்க அர்ஜுன் நான் அப்படித்தான் செய்வேன் நீ என்னை ஏமாத்திட்ட என்றெல்லாம் தனது வேதனையை சத்யாவிடம் சொல்லி தூங்கி விடுகிறார். அதன் பிறகு சத்யா தன் வளர்ப்பு அப்பாவான நளனிடன் சொல்ல நான் மாப்பிள்ளையிடம் சென்று பேசுகிறேன் என்று சொல்கிறார். அர்ஜுன் மறுநாள் காலையில் ஆபீசுக்கு போகும்போது எங்க அர்ஜுன் போற என்று கேட்கிறார். சத்யாவுக்கு தெரியாமல் அர்ஜுன் ஆபீசுக்கு கிளம்பி விட சத்யா வந்து பார்க்கையில் அர்ஜுனை காணவில்லை என்று சத்யா அர்ஜுனுக்கு போன் செய்கிறார். காலையில காபி கூட குடிக்காம எங்க அவ்ளோ அர்ஜெண்டா போகிரா என்று சத்யா கேட்க வீட்டில உன் மூஞ்சிய பார்த்துட்டே எனக்கு இருக்க புடிக்கல என்று சத்யாவை கடுமையாக கோபப்படுகிறார். அதன் பிறகு ஆபீஸுக்கு அர்ஜுன் போகும்போது ஆபீசுக்கு கீழே நளன் காத்துக் கொண்டிருக்கிறார். அர்ஜுன் என்ன ஆச்சு உங்களுக்கும் சத்யாவுக்கு என்ன பிரச்சனை என்று அர்ஜுனிடம் கேட்க அர்ஜுன் அமைதியாகவே இருக்கிறார் நான் அசிஸ்டன்ட் பிரசிடெண்ட் தான் பிரச்சனையா இருந்தா சொல்லுங்க நான் அதுக்காக நான் எதுனாலும் செய்கிறேன். நீங்க நாமினேட் பண்ணி இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா நான் அப்படியே செய்திருக்க மாட்டேன் என்றெல்லாம் நலன் அர்ஜுனிடம் சொல்லி புரிய வைக்கிறார். 

44
Aadukalam Serial Today Twist and Review Tamil

எனக்கு என் பிசினஸை விட என் பொண்ணு வாழ்க்கை தான் ரொம்ப முக்கியம் மாப்பிள்ளை என் பொண்ணுக்காக நான் எதுனாலும் செய்வேன் என்று நளன் கூற அர்ஜுன் சத்யா உன் பொண்ணே இல்ல ஏன் அப்படி எல்லாம் பொய் சொல்ற என்று தன் மனதுக்குள்ளயே பேசிக் கொள்கிறார். நடிக்காதயா நளன் என்று நளன் மீது மிகவும் கோபம் கொள்கிறார். அதன் பிறகு சத்யா தன் அம்மாவை பார்க்க வரும் பொழுது அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் எப்படி இருக்க என்று கேட்க நல்லா இருக்கே அம்மா என்று சொல்லி கொண்டிருக்கும் போது அக்கா எப்படி இருக்கா என்று கேட்கும்போது அக்கா ரொம்ப நல்லா இருக்கா. அபி மாமா ரொம்ப நல்லா பாத்துக்கிறாரு என்று சொல்ல அப்ப உங்க அக்கா பிரச்சனை முடிஞ்சிடுச்சு உன் பிரச்சனை ஸ்டார்ட் ஆயிருச்சுன்னு சொல்லு என்று அம்மா சத்யாவிடம் பிரச்சினையை குறித்து வாதத்தை வைக்கிறார் இத்துடன் இந்த எபிசோடு முடிவடைகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories