பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே என்ட்ரி கொடுக்கும் நாள் அன்று, போட்டியாளர்கள் அனைவரிடமும் நல்லபடியாக பேசுவது வழக்கம். ஆனால் இந்த முறை... உள்ளே நுழைந்த சில மணிநேரங்களிலே போட்டியாளர்கள் ஒரே பக்கத்தில் உள்ள அறை வேண்டும் என்கிற பிரச்னையை மூட்டி விட்டுள்ளார். முதல் 6 போட்டியாளர்களால் முடிவு செய்யப்படமுடியாத நிலையில், சுனிதா மற்றும் ஜாப்ரி ஆகியோருக்கு பிக்பாஸ் முடிவெடுக்கும் பவாரை கொடுத்தார். ஆனால் அவர்களாலும் முடிவெடுக்க முடியாமல் போனது.
தற்போது 8 போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள நிலையில்... பிக்பாஸ் நீங்கள் எந்த பக்கத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பதை கூறாவிட்டால் உங்களை தொடர்ந்து வரும் 2 போட்டியாளருக்கு இந்த பவர் கொடுக்கப்படும், ஒரு வேலை அவர்கள் எந்த பக்கம் என்பதை தேர்வு செய்தால் நீங்கள் 8 பேரும் வெளியே தான் இன்று தூங்க வேண்டும் என்கிற புதிய குண்டை தூக்கிப்போட ஆண்கள் ஒருவழியாக ரைட் சைடு சிறிய ரூமையும், பெண்களுக்கு லெப்ட் சைடில் உள்ள பெரிய ரூமை எடுத்து கொள்வதாக, ஏதேனும் ஒரு வாரம் நீங்கள் யாரும் ஆண் போட்டியாளர்களை நாமினேட் செய்ய கூடாது என்கிற நிபந்தனையோடு விட்டுக்கொடுக்கிறார்கள். இதை தொடர்ந்து பிக்பாஸ் 106 நாட்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என இரண்டு பாகமாக வீடு பிரிக்கப்பட்டது என்பதை தெரிவித்துள்ளார்.
உங்க ஷோவில் எனக்கு சான்ஸ் கிடைக்கல! விஜய் சேதுபதி சொன்ன சீக்ரெட்; ஷாக் ஆன தீபக்