இதைத்தொடர்ந்து சர்கார், பிகில், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் என தனது படங்களில் தொடர்ந்து பாட வாய்ப்பளித்தார் ஏ.ஆர்.ரகுமான். இதன்மூலம் மிகவும் பேமஸ் ஆனார் பம்பா பாக்யா. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை தொடர்ந்து பாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
ரஜினி, விஜய் போன்ற படங்களில் பாடியுள்ள அவர், தான் அஜித் படத்தில் பாட வேண்டும் என ரொம்ப ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் அவரின் அந்த ஆசை கடைசியில் நிறைவேறாமல் போய் உள்ளது. பம்பா பாக்யாவின் மறைவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 2.30 மணிநேரத்துக்கு மேல.. படம் எடுத்தா பாம்பு (கோப்ரா) கூட தோத்துபோகும்- அன்றே கணித்த விஜய்.. வைரலாகும் வீடியோ