தைரியமாக உண்மையை சொன்ன ராமமூர்த்தி... சிக்கிய கோபி? சூடான ராதிகா... பரபரக்கும் பாக்கியலட்சுமி தொடர்!

First Published Nov 22, 2022, 5:22 PM IST

விஜய் டிவியில் விறு விறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இன்றைய எபிசோடின் ஹை லைட்டே ராமமூர்த்தி தாத்தா தைரியமாக கூறிய அந்த வார்த்தை தான். இது குறித்த தகவல்கள் இதோ..
 

baakiyalakshmi

குடும்ப தலைவிகளும், சாதிக்க முடியும் என்கிற கருத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. எதிர்பாராத பல திருப்பங்களுடன், தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பெற்றோரின் ஆசைக்காக தனக்கு பிடிக்காத பாக்கியலட்சுமி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் கோபி, அவரை ஒரு சமையல் காரியாக மட்டுமே பார்க்கிறார். மனைவியின் மீது பாசம் இல்லாவிட்டாலும் கோபிக்கு தன்னுடைய மூன்று பிள்ளைகள் மீது அவ்வளவு பாசம். குறிப்பாக அவருடைய மகள் இனியா தான் அவருடைய உயிர்.
 

பாக்கியா உடன் நடந்தது, தனக்கு இஷ்டம் இல்லாத திருமணம்  என்பதால், கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வரும், தன்னுடைய பழைய காதலியான ராதிகாவை பார்த்ததும் கோபிக்கு அவர் மேல் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் ராதிகாவுக்காக தன்னுடைய குடும்பம், குழந்தைகளை உதறி விட்டு, அவரையே திருமணம் செய்து கொள்கிறார் கோபி.

OTT Release This Week: இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்கு வரிசை கட்டிய சூப்பர் ஹிட் படங்கள்!
 

மேலும் ராதிகாவுடன் தன்னுடைய முன்னாள் மனைவி மற்றும் பெற்றோர் முன்பு நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற லட்சியத்தோடு அவர்கள் வாழும் வீட்டின் முன்பே ராதிகா மற்றும் அவருடைய மகள் மயூ உடன் குடியேறிஏறுகிறார். இனியா, பள்ளியில் நடந்த பிரச்சனைக்காக அவருடைய அப்பா உதவியை நாடியதால், பாட்டி ஈஸ்வரி அடித்ததால், கோபியுடன் இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.
 

baakiyalakshmi

தன்னுடைய பேத்தி இனியா கோபியுடன் இருப்பதால், ராம மூர்த்தியும் கோபியின் வீட்டிற்குள்ளேயே குடி புகுந்துள்ளார். இவர் அங்கு சென்றதில் இருந்தே, ராதிகாவை கடுப்பேத்தி வரும் நிலையில் தற்போது அவரது சமையல் குறித்து உண்மையை பேசி, கோபியை சிக்கவைத்துள்ளார். ஏற்கனவே ராதிகா சமைக்கும் சமையலை சாப்பிடவும் முடியாமல், வெளியே எதையும் சொல்லவும் முடியாமல் தவித்து வருகிறார் கோபி. இந்நிலையில் இன்று முதல்முறையாக ராதிகாவின் சமையலை சாப்பிட்டு விட்டு, இதெல்லாம் ஒரு சாப்பாடா என கேட்டு ராதிகாவுக்கு செம்ம ஷாக் கொடுக்கிறார்.

ஜெயிலர் படத்திற்கு முன்பே ரிலீசுக்கு தயாராகும் தலைவரின் படம்..! செம்ம குஷியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!
 

இவர் திடீர் என உண்மையை கூறியது, என்ன சொல்வது என தெரியாமல் முழிக்கும் கோபி நல்லாதானே இருக்கு என சமாளிக்கிறார். மேலும் மிகவும் கோபமாக ராதிகா அவரை முறைக்கிறார்... மேலும் எப்போதும் போல் சில சென்டிமெண்டுடன் பாக்கியா வீட்டிலும் காட்சிகள் நகரட்டுள்ளது. ஆனால் இன்றைய தினத்தின் ஹை லைட் என்றால், அது ராம மூர்த்தி சமையல் குறித்து உண்மையை பேசி கோபியை சிக்க வைத்தது தான்.

17 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்தை சந்தித்த 'சந்திரமுகி' பட நடிகை! உச்சகட்ட மகிழ்ச்சியில் எடுத்து கொண்ட செல்ஃபி!

click me!