நடிகர் சிம்புவின் கெரியரை கொரோனாவுக்கு முன்.. கொரோனாவுக்கு பின் என பிரித்து விடலாம். அந்த அளவுக்கு டோட்டலாக மாறி உள்ளது. கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை உடல் எடை அதிகரித்து கைவசம் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த சிம்பு, கொரோனா ஊரடங்கு சமயத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார்.
ஆனால் பத்து தல படத்தின் ஷூட்டிங்கை முடித்ததும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்துவிட்டு தன் அடுத்த பட பணிகளை தொடங்க உள்ளாராம். அவரது அடுத்த படம் கொரோனா குமார் இல்லை என்று கூறப்படுகிறது. சுதா கொங்கரா அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரில் ஒருவர் தான் சிம்புவின் அடுத்த பட இயக்குனராக இருப்பார்கள் என கூறப்படுகிறது.