இந்நிலையில், அயோத்தியை சேர்ந்த ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்யா என்கிற துறவி ஒருவர், பதான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, நடிகர் ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்து கொன்றுவிடுவேன் என ஆவேசமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவி நிறத்தை கலங்கப்படுத்தி உள்ள இதுபோன்ற படங்களை புறக்கணிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஷாருக்கான் தொடர்ந்து சனாதன தர்மத்தை கலங்கப்படுத்தி அதன்மூலம் பணம் சம்பாதித்து வருவதாகவும், சனாதன தர்மத்தை கலங்கப்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் பேசியுள்ளார். பதான் திரைப்படத்தை ஏதேனும் திரையரங்குகளில் திரையிட்டால் அந்த திரையரங்கை கொளுத்துவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...Diya Dance Video குடும்ப பார்ட்டியில் சூர்யா - ஜோதிகா மகள் தியா ஆடிய டான்ஸ்..! லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!